இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முடிவடைந்த நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோதிரா மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதிலும் வரும் 24ஆம் தேதி அன்று நடக்க உள்ள டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இவ்வேளையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்டது.
இதோ கடைசி 2 போட்டிகளுக்கான இந்திய அணி : விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணைக்கேப்டன்), ரோகித் ஷர்மா, மயங்க் அகர்வால், சுப்மன் கில், புஜாரா, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, பண்ட் (விக்கெட் கீப்பர்), சாஹா (விக்கெட் கீப்பர்), அஷ்வின், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் ஷர்மா, பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
#TeamIndia for last Two Tests against England announced.@Paytm #INDvENG
— BCCI (@BCCI) February 17, 2021
TEAM – Virat Kohli (Capt), Rohit Sharma, Mayank Agarwal, Shubman Gill, Cheteshwar Pujara, Ajinkya Rahane (vc), KL Rahul, Hardik Pandya, Rishabh Pant (wk), Wriddhiman Saha (wk), R Ashwin, Kuldeep Yadav, Axar Patel, Washington Sundar, Ishant Sharma, Jasprit Bumrah, Md. Siraj.
— BCCI (@BCCI) February 17, 2021
இதுதவிர நெட் பவுலர்களாக அன்கித் ராஜ்புட், ஆவேஷ் கான், சந்தீப் வாரியார், கிருஷ்ணப்ப கவுதம் மற்றும் சவுரப் குமார் இடம்பெற்றுள்ளனர். இரண்டு ஸ்டான்ட்பை பிளேயர்களாக கே.எஸ். பரத் மற்றும் ராகுல் சாஹர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போது காயமடைந்த வெளியேறிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சமி ஆகியோர் அணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இந்த அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. மேலும் அவர்களது காயம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. ஷமி காயத்தில் இருந்து மீண்டது உறுதியானால் அணியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.