நடந்து முடிந்த 11 வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணி இறுதி போட்டிக்கு நுழையாத போதிலும் அந்த அணியை தினேஷ் கார்த்திக் சிறப்பாக வழி நடத்தி பலே ஆப் சுற்று வரை அழைத்து சென்றார். இந்நிலையில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய தினேஷ் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்த ஷாருக்கான், முன்னாள் கொல்கத்தா வீரர் கம்பீரை இழிவு படுத்தியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா அணியில் விளையாடி வந்த கம்பீர் அந்த அணியின் கேப்டனாகவும் இருந்து வந்தார், ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது கொல்கத்தா அணி கம்பீரை வீட்டுக் கொடுக்க தயாராக இருந்தது. இதனால் அவரை டெல்லி அணி ஏலமெடுத்தது. கொல்கத்தா அணியில் அவருக்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமித்தது.
இந்நிலையில் தற்போதைய கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கின் பிறந்தநாளை ஒட்டி கொல்கத்தா அணியின் உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறியிருந்தார். “என்னுடைய கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். நான் இதை சம்பரதாயத்திற்கு கூறவில்லை. இவரை தவிர வேறு எவரும் இந்த அளவிற்கு தகுதியானவர்கள் ஆக முடியாது. எங்களிடம் ஒரு சில நல்ல திறமைசாலிகள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் நாங்கள் இதை கொண்டாட வேண்டும் “என்று பதிவிட்டுள்ளார்.
Wishing my Captain @DineshKarthik the happiest of Birthday. Not because it is customary to do so, but because nobody else deserves it more. We have such Few Good Men left…so need to celebrate them. Love u man. Be healthy & happy.
— Shah Rukh Khan (@iamsrk) June 1, 2018
இந்த பதிவில் அவர் கூறியுள்ள ‘இவரை தவிர வேறு எவரும் இந்த அளவிற்கு தகுதியானவர்கள் ஆக முடியாது’ என்று கம்பீரை தான் குறிப்பிடுகிறார் என்வும், முன்னாள் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் அந்த அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளார். மேலும் அந்த அணிக்காக நிறைய பாடுபட்டுள்ள அவரை இப்படி அவமான படுத்திவிட்டார் ஷாருக்கான் என்று ரசிகர்கள் குறைகூறி வருகின்றனர்.