ஆசிய கண்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் எப்போதும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றன. அதில் தங்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்துவதால் பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடரில் விளையாடுவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கை மற்றும் துபாயில் விளையாட வெற்றியும் கண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் அப்பாவி இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் 26 அப்பாவி மக்கள் இயற்கை எழுதியது மொத்த இந்தியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அதற்கு காரணமான பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் அதிரடியான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளது.
அப்ரிடி காட்டம்:
குறிப்பாக சிந்து நதியில் தண்ணீரை நிறுத்தி வைத்து, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களை வெளியேற்றி இந்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ஒரு சிறிய பட்டாசு கொளுத்தினால் கூட அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்தியர்கள் சொல்வதாக அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். மேலும் 8 லட்சம் பேர் கொண்ட ராணுவத்தை வைத்திருந்தும் இப்படிப்பட்ட தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியாத இந்தியர்கள் பாகிஸ்தானை காரணமாகச் சொல்லி நாடகம் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ள்ளார்.
இது பற்றி சாமா டிவி எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அங்கே ஒரு சிறிய பட்டாசு வெடித்தால் கூட அவர்கள் பாகிஸ்தானை குறை சொல்கின்றனர். காஷ்மீரில் உங்களிடம் வலுவான 8 லட்சம் பேர் கொண்ட ராணுவம் இருந்தும் இப்படி நடக்கிறது. அப்படி உங்களுடைய மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்களின் ராணுவம் தாக்கமற்றதாக பயனற்றதாக இருக்கிறது”
இந்தியர்கள் கோபம்:
“அந்த நிகழ்வு நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்குள் இந்திய ஊடகங்கள் பாலிவுட் திரைப்படம் போல மாறிவிட்டன. கடவுளின் நன்மைக்காக சொல்கிறேன். அனைத்தையும் பாலிவுட் படம் போல நாடகம் செய்யாதீர்கள். சொல்லப்போனால் அவர்கள் பேசும் விதத்தை நான் மகிழ்ச்சியுடன் பார்க்கிறேன். என்னைக் கேட்டால் தங்களைத் தாங்களே படித்தவர்கள் என்று சொல்லும் இந்தியர்கள் தங்களது சிந்தனைகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: இந்தப் பையனை சரியா பட்டை தீட்டுனா.. சிஎஸ்கே அணியின் வருங்காலமா வருவாரு.. ரவி சாஸ்திரி கணிப்பு
“அதே போல இந்தியாவுக்காக நிறைய கிரிக்கெட்டில் விளையாடிய 2 பேர் நேரடியாக பாகிஸ்தான் தான் அதற்குக் காரணம் என்று குறை சொன்னார்கள். சகோதரர்களே ஏன் பாகிஸ்தானை சொல்கிறீர்கள்? நீங்கள் சொல்வதற்கான ஆதாரத்தைக் கொஞ்சம் காட்டுங்கள்” என்று கூறினார். அவருடைய இந்தப் பேச்சு இந்தியர்களை மேலும் கோபமடைய வைப்பதாக இருக்கிறது.