உங்களுக்கு இன்னும் வயசாகல. சச்சின் குறித்து நெகிழ்ந்து பேசிய சேவாக் – காரணம் இதுதான்

Sehwag
- Advertisement -

சாலை பாதுகாப்பு விழிப்புணர்பு கிரிக்கெட் போட்டி மும்பையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய லெஜன்ட்ஸ் அணியும் வெஸ்ட்இண்டீஸ் லெஜன்ட்ஸ் அணியும் மோதின.

sehwag-sachin

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அபாரமாக ஆடிய விரேந்தர் சேவாக் 11 பவுண்டரிகள் குவித்து 74 ரன்கள் விளாசினார். இதன்மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

ஆட்ட நாயகன் விருது பெற்ற சேவாக் கூறியதாவது : நாங்கள் எப்படி மைதானத்திற்குள் பாதுகாப்பான உபகரணங்கள் இல்லாமல் சென்றால் காயம் ஏற்படுமோ, அதுபோல்தான் வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் இல்லாமல் ஓட்டினால் கடுமையான காயங்கள் ஏற்படும். அதனை நாம் உணரவேண்டும்.

virender sehwag

கண்டிப்பாக அனைவரும் ஹெல்மெட் உபயோகிக்க வேண்டும். இந்த மைதானம் நிரம்பும் என்று எதிர்பார்க்கவில்லை. சச்சின் டெண்டுல்கருடன் ஆடுவது அலாதியான விஷயம். அவருடன் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சியான ஒரு தருணமாக நான் கருதுகிறேன்.

- Advertisement -

எப்போதும் அவரது பேட்டிங்கை எதிர்முனையில் இருந்து பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும் . இந்த போட்டியில் கூட வெற்றிக்காக உழைத்தார் சச்சின் டெண்டுல்கர். அவரது குறிக்கோள் எப்போதும் வெற்றி மட்டுமே. இப்போதும் அவர் இளைஞரைப் போல் ஆடுகிறார். என்னிடம் வந்து சீரியசாக ரிஸ்க் எடுக்காமல் ஆடு என்கிறார்.

Sachin

தற்போதும் கூட இளைஞர்களை போல கேளிக்கையான போட்டியில் கூட வெற்றியை நோக்கிச் செல்கிறார். இவ்வாறு சச்சின் டெண்டுல்கரை பற்றி பேசினார் விரேந்தர் சேவாக்.

Advertisement