அஷ்வின் இதை மட்டும் எப்போவும் பண்ணக்கூடாது. தோனி விதித்த கட்டளை – சேவாக் பகிர்ந்த தகவல்

Sehwag
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்தமாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றது பலருக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. இந்நிலையில் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த தொடரில் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Ashwin

இந்நிலையில் அவரது பந்து வீச்சு குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில் : அஸ்வின் ஒரே மைன்ட்செட்டுடன் எப்போதும் பந்து வீசுவார். ஆனால் ஆப் ஸ்பின்னரான அவர் அவரது பந்து வீச்சில் நிறைய வேரியேஷன்களை செய்து பார்க்க முயற்சி செய்கிறார்.

- Advertisement -

அவரது ஆப் ஸ்பின்னில் நிறைய பேட்ஸ்மேன்கள் பவுண்டரிக்கு விரட்டி விடுவார்கள் என்ற பயத்தினால் பல மாறுபாடுகளை அவர் செய்கிறார். ஆனால் தோனி விக்கெட் கீப்பிங் செய்த காலங்களில் அஸ்வின் இதுபோன்ற பந்துவீச்சு மாறுபாட்டை அவர் செய்யும் போது தோனி அதற்கு அனுமதித்தது இல்லை. பெரும்பாலான நேரங்களில் தோனி அதனை தடுத்து விடுவார்.

மேலும் எப்போதும் அஷ்வின் வேரியேஷன்களை செய்யும் போது தோனி அதற்கு அனுமதி அளித்தது கிடையாது. சிக்ஸ் அடிக்க முயற்சிக்கும் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை விடுவார்கள் என்ற காரணத்தினால் அஸ்வினை பெரிய அளவு மாறுபாடு இல்லாமல் தோனி வைத்திருந்தார்.

தற்போது அஸ்வின் பந்து வீசும் விதம் விக்கெட்டுகளை கைப்பற்ற பெரிய அளவிற்கு உதவாது ஏனெனில் அவர் மீண்டும் பழையபடி ஆப் ஸ்பின் வீசினால் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். நிச்சயம் இதேபோன்றுதான் அஷ்வின் பந்துவீச வேண்டும் என்று சேவாக் கூறினார்.

Advertisement