- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs PAK : நான் போட்ட இந்த தவறான கணக்கினாலே தோல்வி அடைந்தோம் – சர்பிராஸ் அகமது

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் நடந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 140 ரன்களும், கோலி 77 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

அதன் பின்னர் 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழைய குறுக்கிட்டதால் போட்டி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓவர்களில் 136 ரன்கள் அதாவது 40 ஓவர்களில் 302 ரன்கள் அடிக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை மட்டுமே அடித்தது. இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியதாவது : இந்த போட்டியில் வெற்றி பெற்றது நல்ல அம்சம் ஆகும். ஆனால் நாங்கள் பந்துவீசும் போது சரியான இடத்தில் வீசவில்லை. மேலும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார் எங்களது திட்டத்தை அவர் சிறப்பாக முறியடித்துவிட்டார். நாங்கள் டாசில் வெற்றி பெற்றதும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை வீழ்த்தவே இரண்டு ஸ்பின்னர்கள் என்ற கணக்கிட்டு போட்டியில் இறங்கினோம்.

மைதானம் ஸ்பின் பந்து வீச்சுக்கு நன்றாக திரும்பும் என்பதால் இரண்டு பந்துவீச்சாளர் உடன் இறங்கிடும். ஆனால் இந்த ஸ்பின் பந்து வீச்சாளர்களை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். மேலும் அனைத்து பந்துவீச்சாளர்களும் இந்த போட்டியில் சரியான இடத்தில் பந்து வீசவில்லை. இதனால் இந்திய அணி சிறப்பாக ரன் குவித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. நாங்கள் பேட்டிங் செய்யும் போதும் அடுத்தடுத்து இரண்டு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தோம் இதுவும் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று அவர் கூறினார்.

- Advertisement -
Published by