ஐ.பி.எல் ரெக்கார்ட்டை வச்சி இவரை தூக்கிடமுடியாது. இவர்தான் இந்திய அணிக்கு கேப்டன் – சரன்தீப் சிங் பேட்டி

- Advertisement -

விராட் கோலி ஒரு பேட்ஸ்மேனாக அனைத்து வகை பார்மட்களிலும் நன்றாக ஆடி வரும் நிலையில் கேப்டனாக முக்கியமான தொடர்களில் அதாவது ஐ.சி.சி தொடர்களில் நாக் அவுட் சுற்றுகளில் தோற்று வருகிறார். மேலும் ஐபிஎல் தொடரில் கூட அவர் இதுவரை ஒருமுறை கூட டைட்டில் பட்டத்தை வென்றதில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்க உள்ள டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக வேறு ஒரு வீரரை கேப்டன் பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஒருபக்கம் ரசிகர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் விராட் கோலியை அவ்வளவு எளிதில் தூக்கி விட முடியாது என்று கூறியுள்ளார்.

kohli 2

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் பேசிய இந்திய முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் , விராட் கோலி மிக அற்புதமான மற்றும் மிக அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார். அவரது பிட்னஸ் குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது. மிகவும் துடிப்பான மற்றும் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சொல்லக்கூடிய வீரர் ஆவார். அவர் ஒவ்வொரு முறை தனது அணியை சரியாக வழிநடத்தும் சென்றாலும் ஏதோ ஒரு காரணமாக அவரால் வெற்றி கோப்பையை ருசிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் அவர் தனது அணியை மோசமாக வழி நடத்தியது கிடையாது.

அவரை இந்த சின்ன காரணங்களுக்காக கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட இயலாது. பேட்டிங் , பில்டிங் என இரண்டிலும் மிக சாமர்த்தியமாக ஆடி வரக்கூடிய ஒரே வீரர் விராட் கோலி. அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையை வாங்கி தருவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சரண்தீப் சிங் கூறியுள்ளார்.

Kohli 1

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சொதப்பிய ஷிகர் தவான், இந்த ஆண்டு நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடரில் நன்றாக ஆடுவாரா ?
என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்துப் பேசிய சரண்தீப் சிங், வெறும் ஒரு தொடரில் மட்டும் வைத்து பார்த்து தவானின் ஆட்டத்தை கணக்கிட முடியாது.

dhawan

அவர் அதன் பிறகு ஒருநாள் தொடரில் மிக நன்றாக விளையாடினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் நாட்களில் ஐபிஎல் தொடர் வர உள்ளது. அதில் தவான் மிக நன்றாக வகையில் விளையாடுவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நிச்சயமாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஜோடி இந்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரில் ஓபனிங் விளையாடும் என்று இறுதியில் கூறி முடித்தார்.

Advertisement