21 வருஷமா இதுக்காகத்தான் வெயிட் பண்ணேன். சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த பிறகு – சாம்சன் பகிர்ந்த சுவாரசியம்

Sanju-Samson-and-Rajinikanth
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த 2015-ஆம் ஆண்டே இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் இன்றளவும் அவரது திறமைக்கு சரியான இடம் கிடைக்கவில்லை என்றும் போதிய வாய்ப்புகள் அவருக்கு கொடுக்க மறுக்கப்பட்டு வருகிறது என்ற பேச்சுக்களும் இருந்து வருகின்றன. ஏனெனில் அதிரடி ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பான திறமையை தன் வசம் வைத்திருந்தாலும் அவருக்கான நிரந்தர இடம் இந்திய அணியில் வழங்கப்படவில்லை.

இதுவரை இந்திய அணிக்காக 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் 138 போட்டிகளில் விளையாடியது மட்டுமின்றி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து வெளியிட்ட சில புகைப்படங்களானது தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளன. தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தை பிடிக்காதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் மீது ரசிகர்கள் அன்பினை வெளிகாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியின் ரசிகரான சஞ்சு சாம்சனும் தற்போது அவரை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து அதன்பிறகு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :

- Advertisement -

நான் ஏழு வயது முதலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர். நான் எனது பெற்றோர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன். “ஒரு நாள் நிச்சயம் ரஜினி சாரை நான் அவரது வீட்டில் நேரில் சென்று பார்ப்பேன்” என்று எனது பெற்றோர்களிடம் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

இதையும் படிங்க : IPL 2023 : இந்த வருஷம் டெல்லி அணியின் கேப்டன் இவர்தான். அணி நிர்வாகம் வெளியிட்ட – அதிகாரபூர்வ அறிவிப்பு

அதன் பிறகு தற்போது 21 ஆண்டுகள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement