ரஹானே தவறு செய்ஞ்சத பாத்தும் கோலி இவ்வளவு அமைதியா சென்றது ஆச்சரியமளிக்கிறது – சஞ்சய் மஞ்சரேக்கர்

Sanjay
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை குவித்தது. துவக்க வீரர் ப்ரித்வி ஷா டக் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான அகர்வாலும் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற புஜாரா மற்றும் கோலி ஆகியோர் அணியை ஓரளவு நல்ல நிலைமைக்கு அழைத்துச் சென்றனர்.

Shaw

- Advertisement -

அதிலும் புஜாரா 43 ரன்கள் எடுத்து வெளியேற பின்னர் ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய கோலி சதத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக ரஹானே தவறாக அழைத்த ஒரு ரன்னை ஓடுவதற்காக முயற்சித்த கோலி மீண்டும் கிரீஸ் திரும்ப முடியாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி பெரிய சலசலப்பையும் ஏற்படுத்தியது.

நேற்றைய போட்டியில் நன்றாக சென்றுகொண்டிருந்த இந்திய அணிக்கு ஏற்பட்ட திருப்புமுனை அந்த இடம்தான். கோலி பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஓரளவு பெரிய ரன்களை இந்திய அணி குவிக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் முக்கியமான கட்டத்தில் தேவையின்றி அவர் ஆட்டமிழந்ததால் இந்திய அணி அடுத்தது விக்கெட்டுகளை இழந்து தற்போது 244 ரன்களுக்கு முதல் இன்னிங்சை முடித்துள்ளது.

Rahane

நேற்று 233 ரன்களுடன் முதல் நாள் ஆட்டத்தை முடித்த இந்திய அணி இன்று துவங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 11 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழுந்து 244 ரன்களில் இன்னிங்சை முடித்துள்ளது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த ரன் அவுட் குறித்த தனது கருத்தினை இந்திய அணியின் முன்னாள் வீரரும் வார்னணையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Kohli 1

“அந்தப் பந்தில் ரன் எடுத்து இருக்க வேண்டிய அவசியமே இல்லை. மேலும் அந்த பந்தில் ரன் எடுத்து இருக்கவே முடியாது”, ஃபில்டர் மிக அருகில் இருந்தார் இருப்பினும் பார்ட்னர் ரஹானேவின் அழைப்பை தட்டாமல் ரன் எடுக்க முன் வந்தார் கோலி கடைசியில் ரஹானே வேண்டாம் என்றதும் கோலி ரன் அவுட் ஆகிவிட்டார். தனது பார்ட்னர் மீது தவறு இருந்தாலும் அவரை கோபித்துக் கொள்ளாமல் சாந்தமாக கோலி பெவிலியன் திரும்பியது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த இன்னிங்சில் பல தடைகளை கடந்து கோலிக்கு ரன் அவுட் ஆகி வெளியேறியதில் கொஞ்சம் வலி இருந்திருக்கும் அது இயல்பு என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement