டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் நிச்சயம் இதனை சாதிப்பார் – பேட்டிங் பயிற்சியாளர் நம்பிக்கை

Rohith
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

rohith

இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் போட்டியில் ராகுலுக்கு பதிலாக ரோகித் சர்மா துவக்க வீரராக களம் இறங்குவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது ரோஹித் சர்மா குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இந்திய அணியில் தற்போது டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவது சிறப்பான ஒன்றாகும். ஏனெனில் அவரது ஆட்டக்காரராக எப்போதும் சிறப்பாக அமைந்துள்ளது. அதனால் ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். அவ்வாறு ரோஹித் துவக்க வீரராக விளையாட ஆரம்பித்த பின்னர் டெஸ்ட் போட்டிகளில் பெரிய இலக்குகளை எட்ட நிச்சயம் ரோகித் சர்மா வழி வகுப்பார்.

Rohith-1

ஏனெனில் அவருடைய ஆட்டம் எப்போதும் அதிரடி பாணியிலேயே இருக்கும். பெரிய ரன்களை அடிக்கும் திறமை அவரிடம் உள்ளது. எனவே துவக்க வீரராக ரோஹித் களம் இறங்கும் போது பெரிய இலக்குகளை கூட எளிதாக எட்டும் என்று நம்புகிறோம். அவ்வாறு பெரிய இலக்கினை எதிர்த்து ஆடும்போது இது போன்ற ஒரு அதிரடி துவக்க வீரர்கள் இருப்பது நமக்கு மேலும் பலம் சேர்க்கும் விடயம் ஆகும் என்று சஞ்சய் பாங்கர் கூறினார்.

Advertisement