கங்குலி எங்கள் அணியின் அறைக்கு வந்து வருத்தப்பட்டார். அவருக்கு பெரிய மனசு – சங்கக்காரா பகிர்ந்த தகவல்

Sanga
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இலங்கை அணியின் முன்னாள் வீரரான சங்கக்காரா தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர் ஒருநாள் போட்டியில் இலங்கை வீரர் அர்னால்ட் மற்றும் கங்குலிக்கு இடையேயான உரசல் குறித்து தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். மேலும் இலங்கை அணியினரின் ட்ரஸிங் ரூம்க்கு மைதானத்தில் நடந்த சம்பவத்திற்காக தான் சஸ்பெண்ட் செய்யப் படலாம் என்றும் வருத்தம் தெரிவித்ததாக அதுபற்றி அவள் கவலைப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Arnold

கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தொடரின் முடிவில் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் கங்குலி இலங்கை அணியின் ரசல் அர்னால்டு ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

- Advertisement -

போட்டியின் போது மைதானத்தின் பிட்ச் மீது அடிக்கடி ஓடியதால் அதனை சுட்டிக்காட்டிய கங்குலி ஒரு கட்டத்தில் கோபமடைந்து மோதலில் ஈடுபட்டார். இவர்கள் இருவரின் மோதலை அம்பயர்கள் தலையிட்டு விலக்கி விட்டனர். அந்த நிகழ்வு நடந்தபோது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பேசிய சங்ககாரா :

Arnold 1

டிரெஸ்சிங் ரூமிற்கு வந்த கங்குலி இந்த நிகழ்வு தன்னை சஸ்பெண்ட் செய்யும் அளவிற்கு கொண்டு செல்லும் என்று கூறியதாகவும், அதுகுறித்து வருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். உடனே நாங்கள் அனைவரும் ஆறுதல் கூறியதுடன் இந்த நிகழ்வை பெரிதாக மாற்றமாட்டோம் எல்லாம் சரியாகிவிடும் என்று தான் உறுதி அளித்ததாக சங்கக்காரா குறிப்பிட்டார்.

Advertisement