அந்த இருவருக்கு தான் வாய்ப்பு என்றால் இவர்கள் இருவரும் அவ்ளோதானா – தொடரும் இளம் வீரரின் சோகக்கதை

Saini-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று நடைபெற உள்ளது.

IndvsNz

- Advertisement -

இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்டதால் கடந்த போட்டியின் வெற்றி விழாவின்போது கோலி இந்திய அணியில் சைனி மற்றும் சுந்தர் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்கள். அவர்கள் இருவரும் வாய்ப்புக்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு அளிப்பேன் என்று உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் சைனி மற்றும் சுந்தர் ஆகியோர் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. வேகப்பந்துவீச்சாளர் தாகூருக்கு பதிலாக சைனியும், ஆல்ரவுண்டர் சிவம் துபேவிற்கு பதிலாக சுந்தரும் இன்றைய அணியில் விளையாடுவார்கள். இவர்கள் இருவரும் ஆடினாலும் இளம் வீரரான சஞ்சு சாம்சனின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஏனெனில் ரிஷப் பண்ட் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்பட்டு தன்னை நிரூபிக்க தவறியதால் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

samson

ஆனால் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வாய்ப்புக்காக காத்திருந்த சாம்சன் கடந்த சில தொடகளாக அணியில் இடம் பெற்றும் உட்கார வைக்கப்பட்டு வருகிறார். அவரை பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் பெருமளவு குரல் கொடுத்து வந்தாலும் ஒரு வாய்ப்பினை மட்டும் வழங்கி அவரை வெளியே அமர்த்தியுள்ளது இந்திய அணி. இந்நிலையில் இன்றும் அவரது சோகக்கதை தொடருமா என்பது போட்டியின் ஆரம்பத்தில் தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement