14 வயதில் டிராவிட் மகன் செய்த சாதனை. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ? – டிராவிட்டை விட ஒருபடி மேலதான் இருக்காரு

- Advertisement -

இந்திய அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் ராகுல் டிராவிட். அவர் ஆடிய காலத்தில் எந்த ஒரு சுயநலமும் இன்றி இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். மேலும் கிரிக்கெட் முடிந்த பிறகும் அவர் கிரிக்கெட்டுக்காக தற்போது உழைத்துக் கொண்டிருக்கிறார்.

dravid

- Advertisement -

மேலும் அவரது தலைமையில் அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக இருந்தபோது தான் ப்ரித்வி ஷா தலைமையில் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தது. தற்போது இந்திய அணியில் முக்கிய வீரராக திகழும் அகர்வால், ஷா மற்றும் கில் ஆகியோர் போன்ற பல திறமைசாலிகளை அவர் உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியில் தலைவராகவும் டிராவிட் தொடர்ந்து கிரிக்கெட்டுக்காக பணியாற்றி வருகிறார்.

அதே போன்று தற்போது அவர் மகனும் (சமித் டிராவிட்) கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். 14 வயதுக்கு உட்பட்ட அணியில் சிறப்பாக விளையாடி வரும் டிராவிட்டின் மகன் சமித் ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் 14 வயதுக்குட்பட்ட ஒரு போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். மேலும் அடுத்து இன்னிங்சிலும் 94 ரன்கள் குவித்தார்.

dravid

அதனை தொடர்ந்து தற்போது அவரது பள்ளி சார்பில் நடைபெற்ற போட்டியிலும் இரட்டை சதம் அடித்து அசத்தினார். 27 பவுண்டரிகளுடன் 211 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பௌலிங்கிலும் 2 விக்கெட் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதுபோல ரசிகர்கள் இந்த செய்தியை சமூகவலைதளத்தில் பரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement