என் புருஷன் தூக்கத்துல கூட இதை நெனச்சி பொலம்புறாரு. சாக்ஷி தோனி வெளியிட்ட தகவல் – சூப்பர் நியூஸ் இதோ

Sakshi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார் மேலும்., ஐபிஎல் தொடரும் இல்லாததால் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொள்வதில்லை. இந்நிலையில் அவரது மனைவி சாக்ஷி நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு நேரலையில் பேட்டி கொடுத்தார்.

- Advertisement -

அப்போது பல கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் தோனியின் ஓய்வு பற்றி சமீபத்தில் வந்த வதந்திகள் பற்றியும் பேசினார். இது வெறும் வதந்தி தான் லாக்டவுன் காலத்தில் உங்களது மனநிலை பிரண்டு விட்டது என்பது போன்றும் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில் தோனி சும்மா இருக்கும் நேரங்களில் வீட்டில் என்ன செய்கிறார் என்பது பற்றியும் பேசியுள்ளார் சாக்ஷி சிங்.

அதில் அவர் கூறியதாவது : தோனி இந்த லாக் டவுன் காலத்தில் சுமார் 7 பைக்குகளை வடிவமைத்தார். அந்த ஏழு பைக்குகளும் பழைய மாடல் பைக்குகள் ஆகும். அதற்கான உதிரிபாகங்களை கடையிலிருந்து வாங்கி வந்து ஒரு முழு பைக்கை தயார் செய்தார் . ஆனால் ஒரு சில பாகங்களை சரியாக பொருத்த தவறிவிட்டார்.

இதன் காரணமாக அந்த பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. உடனடியாக அனைத்தையும் பிரித்து போட்டுவிட்டார். அவர் அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அதிகமாக கேம் விளையாடுகிறார். இது அவரது மனதை திசை திருப்புகிறது. குறிப்பாக எப்போதும் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார். தூக்கத்தில் கூட பப்ஜி குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் சாக்ஷி டோனி.

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்து தினமும் ஒரு செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது தோனியின் மனைவி சாக்ஷி வெளியிட்ட இந்த தகவல் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியில் மீண்டும் விளையாடவில்லை.

Dhoni-1

மேலும் அவர் விளையாட தயாராக இருந்தாலும் அவரை இந்திய அணி நிர்வாகம் ஒதிக்கி வருகிறது. மேலும் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தனது திறமையை நிரூபித்து டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறலாம் என்று நினைத்திருந்த தோனியின் கனவில் கொரோனா வைரஸ் மண்ணை அள்ளிப் போட்டு விட்டது என்றே கூறலாம்.

இந்த வருட ஐபிஎல் நடைபெறாமல் போகும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவது மிகவும் கடினம் என்று பல முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர். ஆனால் தோனி இதுவரை தனது நிலை குறித்தும், ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் தினசரி நாள்தோறும் தோனி குறித்த ஒரு செய்தியாவது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement