தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து முதன்முறையா மௌனம் களைத்த – தோனியின் மனைவி

Sakshi
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இடம் பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. மேலும் அவரது ஓய்வு குறித்த பேச்சும் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தோனி ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் நேற்று விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார். அந்த பதிவின் மூலம் ரசிகர்களிடையே தோனி ஓய்வு அறிவிப்பை அறிவிக்கப் போவதாகவும் நேற்று இரவே அறிவிப்பார் என்றும் வதந்தி பரவியது.

இந்நிலையில் இந்த வதந்தி குறித்தும் தோனியின் ஓய்வு முடிவு குறித்தும் தோனியின் மனைவி சாக்ஷி முதன்முறையாக தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் தனது கருத்தினை தெரிவித்தார். அதன்படி தோனி ஓய்வு முடிவினை தற்போது அறிவிக்க மாட்டார். அவருடைய முடிவு அவரின் கைகளிலேயே உள்ளது.

Dhoni-1

தோனி கூறினால் மட்டுமே அவர் எப்போது ஓய்வு பெறுகிறார் என்று தெரியும். இதனால் நீங்கள் இதுபோன்ற வதந்திகளை பரப்புவதில் அர்த்தமில்லை. இது வெறும் வதந்தியே தோனி ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் என்று சாக்ஷி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement