தோனியின் மனைவி வெளியிட்ட புகைப்படம் – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

Sakshi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருமான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய அணியில் விளையாடவில்லை. மேலும் கடந்த ஆறு மாதங்களாக அவர் அணியில் இருந்து விலகி இருப்பதால் அவர் மீண்டும் அணிக்கு திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்த வருட இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் அணியில் விளையாட தோனி ஆசைப்பட்டார்.

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற கனவும் அவருக்கு இருந்தது. ஏற்கனவே இந்தியனின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஐபிஎல் தொடரில் தோனியின் செயல்பாட்டினை பார்த்த பின்னரே இந்திய அணியில் அவரின் தேர்வு இருக்கும் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அதன் காரணமாக கடந்த மார்ச் 2-ஆம் தேதி சென்னை வந்த தோனி சிஎஸ்கே அணிக்காக தனது பயிற்சியை துவங்கினார். ஆனால் 29ம் தேதி நடைபெற இருந்த போட்டி தற்போது கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தோனியும் பயிற்சியின் பாதியில் சென்னையில் இருந்து ராஞ்சி சென்றடைந்தார். கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடி வரும் அவர்களுக்கு தற்போது இந்த ஓய்வு நிச்சயம் அவசியமானதுதான்.

- Advertisement -

இந்த வேளையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது ரசிகர்களுடன் கலந்துரையாடுவது அதுமட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் தாங்கள் செய்யும் வேலைகள் குறித்து இணையத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தற்போது தோனியின் மனைவி சாக்ஷி தோனி ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் தனது பெட்ரூமில் இருக்கும் தோனி டேப் மூலம் வீடியோகேம் விளையாடிக் கொண்டிருக்கிறார் .அப்போது அவரது மனைவி சாக்ஷி தோனியின் கால்களை தன் மடியில் வைத்து அதை கடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி கலவையான விமர்சனங்களை பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது.

அதையும் தாண்டி தற்போது இந்த புகைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் ரசிகர்களிடம் இருந்து வந்துகொண்டிருக்கிறது. ஏனெனில் ரசிகர்கள் மதிப்பிற்குரிய பிரபல ஜோடியான இவர்கள் அனைவரும் பார்க்கக்கூடிய சமூக வலைத்தளத்தில் இதுபோன்ற புகைப்படத்தையா பதிவிடுவது என்று ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

Advertisement