என்னுடைய சிறப்பான பந்துவீச்சுக்கு இதுவே காரணம் – ஆட்டநாயகன் சைனி பேட்டி

Saini
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழந்து 142 ரன்கள் அடித்தது. இலங்கை அணி சார்பாக பெற அதிகபட்சமாக குஷால் பெரேரா 34 ரன்கள் அடித்தார்.

Saini-1

அதன்பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி துவக்க வீரர் ராகுல் மற்றும் தவானின் சிறப்பான துவக்கத்தால் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது அதன் பிறகு ராகுல் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மூன்றாவது வீரராக ஐயர் களம் இறங்கினார். தவான் 32 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற கோலியும் ஐயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றனர். இறுதிகட்டத்தில் ஐயர் 34 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 144 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த ஆட்டநாயகன் நவதீப் சைனி பேசுகையில் : நான் எனது பயிற்சியை நன்றாக மேற்கொள்கிறேன். நான் எனது பந்துவீச்சில் உறுதியாக இருக்கிறேன் மேலும் என்னுடைய பந்துவீச்சில் வேரியேஷன்களிலும் நான் கவனமாக இருக்கிறேன். யார்க்கர் பந்துவீச்சில் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது.

Saini

மேலும் டி20 போட்டிகளில் அறிமுகமாகும் போது நான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச முடியும் என்ற நம்பிக்கையை பெற்றேன். ஆகியவற்றில் தற்போது சிறப்பாக பந்து வீசுகிறேன் என்று நினைக்கிறன். வேகமாக பந்துவீச வேண்டும் என்று நினைகிறேன் அதேபோன்று ஸ்லோ பந்துகள் அவசியத்தையும் புரிந்து கொள்வேன் என்று சைனி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement