3 ஆவது டி20 போட்டியில் இவர் விளையாடமாட்டார். மாற்றம் நிச்சயம் இருக்குமாம் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Rahul-2

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டி நாளை ஹேமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் ஒரு சிறிய மாற்றம் இருக்கும் என்று கோலி ஏற்கனவே மறைமுகமாக தெரிவித்திருந்தார். அதாவது முதல் இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியில் சிறிய மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கோலி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கோலி கூறுகையில் : மீண்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். பவுலர்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசினர். இந்த சிறப்பான பந்துவீச்சால் தான் நியூசிலாந்து அணியை கட்டுப்படுத்த முடிந்தது. ஆக்லாந்து ஆடுகளத்தை விட ஹேமில்டன் ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று அப்போது கோலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கோலி கூறியதை வைத்து பார்க்கும் போது முதல் 2 போட்டிகளிலும் ரன்களை சற்று அதிகமாகவே வாரிக் கொடுத்த தாகூருக்கு பதிலாக நவ்தீப் சைனி 3 ஆவது போட்டியில் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது. ஏனெனில் சைனியின் வேகம் மற்றும் பவுன்ஸ் ஹேமில்டன் மைதானத்துக்கு ஒத்துவரும் என்பதால் இந்த மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement