கூடிய சீக்கிரம் இவர் இந்திய அணியின் பெரிய விக்கெட் கீப்பராக உருவெடுப்பார் – விரிதிமான் சஹா பேட்டி

Saha
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 மற்றும் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்திய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் சாஹாவிற்கு பதிலாக அணியில் இடம் பெற்ற இவர் இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

Pant

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட ஆறு இன்னிங்சில் 29,0*, 36,97, 23, 89 ரன்கள் குவித்த இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார். இதன் மூலம் குறைந்த இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் பண்ட். இந்நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் கீப்பிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல கேட்ச்சுகளை தவற விட்டதன் காரணமாக பண்ட் விமர்சனத்திற்கு உள்ளானார். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்டிற்கு இடம் கொடுத்த விருத்திமான் சாஹா “எனக்கும் ரிஷப் பண்டிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட பிரச்சினையும் கிடையாது. நாங்கள் இருவரும் நண்பர்கள். இருவரில் யார் அணியில் இடம்பெற்றாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்வோம்.

Pant-2

யார் நம்பர் 1 நம்பர் 2 என்று நான் பார்க்க மாட்டேன். நான் எனது பணியை தொடர்ந்து செய்வேன்.
சிறந்தவர்களை தேர்வு செய்வது நிர்வாகத்தின் கையில் தான் இருக்கிறது. வரிக்குதிரை பற்றி யாரும் முதல் வகுப்பிலேயே கற்றுக்கொள்ள முடியாது. அதுபோல படிப்படியாக தான் முன்னேற வேண்டும்.

pant

ஆனால் பண்ட் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.எதிர்காலத்தில் மாபெரும் முன்னேற்றம் அடைவார். அவர் தற்போது தன்னை படிப்படியாக நிரூபித்து வருகிறார். அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவதை இந்திய அணி எப்போதும் விரும்பும்” என்று கூறியிருக்கிறார்.

Advertisement