இவரை அணியில் சேர்க்கலாமா ? என்று என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் இவரை மட்டும் தான் பரிந்துரைப்பேன் – சச்சின்

sachin
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

jadeja

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் சச்சின் கூறியதாவது : என்னிடம் இந்திய அணி நிர்வாகம் அரையிறுதி போட்டிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டால் நிச்சயம் நான் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை பரிந்துரைப்பேன் என்று கூறினார்.

ஏனெனில் அரையிறுதிப் போட்டியில் விளையாட அவருக்கு முழுத்தகுதி உண்டு மேலும், ஜடேஜாவால் 10 ஓவர்கள் முழுவதுமாக வீச முடியும். அதுமட்டுமின்றி அணிக்கு தேவையான நேரத்தில் 30 முதல் 40 ரன்கள் அடிக்கும் திறமையும் அவரிடம் உண்டு. எனவே அவரது இந்த திறமை நமக்கு அரைஇறுதியில் நிச்சயம் தேவை எனவே அவரை அணியில் சேர்த்துக்கொள்ள நான் பரிந்துரைப்பேன் என்று சச்சின் கூறினார்.

Jadeja

இந்த உலககோப்பை தொடரின் 15 பேர் கொண்ட அணியில் ஜடேஜா இடம்பெற்று இருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான கடைசி போட்டியிலே அவர் அணியில் விளையாடினார். அரையிறுதியில் அவர் விளையாடுவது தற்போது கோலியின் கைகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement