தனது 47 ஆவது பிறந்தநாளை கொணடாமறுத்த சச்சின் இன்று நாள்முழுவதும் என்ன செய்திருக்கார் தெரியுமா ?- விவரம் இதோ

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலக ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது 47 வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இந்திய அணிக்காக சுமார் 24 ஆண்டுகள் விளையாடியுள்ள சச்சின் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அவர்களின் சாதனைகளை இப்போது வரை யாரும் முறியடிக்க படாமல் நிறைய சாதனைகள் உள்ளன.

sachin

- Advertisement -

2013 ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் இன்னும் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் சச்சின் பல விடயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது : இங்கு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் எனது தினசரி நாள் உடற்பயிற்சியோடு துவங்குகிறேன்.

பின்பு எனது அலுவலகம் தொடர்பான வேலைகளை நான் போனில் இருந்து பார்த்து வருகிறேன். இப்பொழுது ஊரடங்கு பிறப்பித்துள்ளதாக வெளியில் எங்கும் செல்வதில்லை. மனைவி, மகன் என குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் என் அம்மாவுடன் அதிக நேரம் உரையாடுகிறேன் என்று சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

sachin6mom6

மேலும் ஊரடங்கு நாட்களில் கேம் விளையாடுவது, திரைப்படங்கள், டிவி சீரியல்கள் என அனைத்தையும் பார்த்து வருவதாக சர்ச்சின் கூறியுள்ளார். எந்த பாடலை கேட்க வேண்டும் என பிள்ளைகளை முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது இந்த ஆண்டு காரணம் வைரஸ் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடாமல் இருக்கிறார்.

மேலும் மக்களுக்காக போராடும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரின் பணிகளை பாராட்டியும் நான் இந்த பிறந்த நாளை கொண்டாடாமல் அவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றும் சச்சின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கிரிக்கெட் குறித்து அவர் பேசுகையில் : விளையாட்டு வீரர்களுக்கு இது கடினமான காலம் தான் இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் மக்களின் நலனே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement