ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிதி திரட்டும் வகையிலான கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்களான சச்சின் மற்றும் யுவராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர்.
This was my favourite corner in the SCG dressing room.
Memories came flooding back today.
📸: @YUVSTRONG12 pic.twitter.com/AWsgfNQjV8— Sachin Tendulkar (@sachin_rt) February 7, 2020
இந்நிலையில் சிட்னி மைதானத்திற்கு சென்ற டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் ஆகியோர் ஒரு சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் சிட்னி மைதான ஓய்வறையில் தான் எப்போதும் பயன்படுத்தும் ஒரு அறையின் மூலையில் சென்று இதுவே இந்த மைதானத்தில் எனக்கு மிகவும் பிடித்த அறை என்று தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை யுவராஜ்சிங் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகவும், ஆடம் கில்க்ரிஸ்ட் தலைமையிலான மற்றொரு அணிக்கு யுவராஜ் சிங் 4-வது வீரராக விளையாடவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.