ஆஸ்திரேலிய தொடரில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இவர் அசத்துவார் . இவர்தான் ஹீரோ – சச்சின் புகழாரம்

sachin
- Advertisement -

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட போகிறது. இதற்காக மூன்று வகையான அணிகள் அறிவிக்கப்பட்டது. தற்போது அனைவரும் சிட்னி மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறார்கள். ஒரு சில வீரர்கள் இந்த மூன்று வகையான அணியிலும் இடம் பெற்றிருக்கிறார்கள். விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி போன்ற வீரர்களில் அகர்வாலும் ஒருவர். மூன்று விதமான போட்டிகளிலும் இடம் பெற்றிருக்கிறார்.

INDvsAUS

- Advertisement -

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மயங்க் அகர்வால் 424 ரன்கள் குவித்துள்ளார். இதன் ஸ்ட்ரைக் ரேட் 156. இதன் காரணமாக டெஸ்ட் வீரர்களில் ஒருவராகக் கருதப்பட்ட மயங்க் அகர்வால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் மயங்க் அகர்வால் ஹீரோவாக இருப்பார் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின். அவர் கூறுகையில்…

மயங்க் அகர்வால் மிகச்சிறந்த வீரர் இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவிலும் அதே ஆட்டத்தை பார்ப்போம் என நம்புகிறேன். ஒருநாள் மற்றும் டி20 தொடரில் துவக்க வீரர்களுக்கான இடத்திற்கு பெரும் போட்டி இருக்கிறது. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மயங் துவக்க வீரராக களம் இறங்குவார் என்பதில் மாற்றமில்லை .

Agarwal 1

ஆஸ்திரேலிய தொடர் முடிவடைந்தவுடன் அனைவரின் கண்களிலும் ஹீரோவாக இருக்கப்போவதாக மயாங்க் அகர்வால் தான் அந்த அளவிற்கு அவர் மிகச் சிறப்பாக இருக்கும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவிலும் ஸ்டீவ் சிமித் டேவிட் வார்னர் ஆகிய வீரர்களையும் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.

agarwal 3

இந்திய அணியின் வெற்றியை தடுக்க இவர்கள் போதும் என்று இவர்களை விரைவில் வீழ்த்திவிட்டால் இந்திய அணி வெற்றிபெற்று விடலாம் என்று தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.

Advertisement