Sachin : என்னை ஏமாற்றி விட்டார்கள் எனக்கு ராயல்டி வேணும் – கேஸ் போட்ட சச்சின்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவர் கிரிக்கெட்டில் அவர் மிகப் பெரிய ஜாம்பவானாக பார்க்க

sachin
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இவர் கிரிக்கெட்டில் அவர் மிகப் பெரிய ஜாம்பவானாக பார்க்கப்படுகிறார்.

Sachin

- Advertisement -

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுத்த பிறகும் கிரிக்கெட் சார்பான பல வேலைகளை அவர் செய்துவருகிறார். அதன்படி ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டன் என்கிற நிறுவனத்துடன் சச்சின் டெண்டுல்கர் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அந்த ஒப்பந்தத்தின்படி அவர்கள் தயாரிக்கும் பேட்டில் சச்சினின் ஸ்டிக்கர், லோகோ மற்றும் படம் என என்ன வேணுமானாலும் தங்களுடைய விளம்பரத்திற்காக அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சச்சினுக்கு ஒரு வருடத்திற்கு 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் சம்பளமாக பேசப்பட்டது. இந்நிலையில் 2018ம் ஆண்டு அந்த நிறுவனம் சச்சினுக்கு உரிய தொகையை வழங்கவில்லை. மேலும் இதுகுறித்து அந்த நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Spartan

ஆனால் அந்தக் கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. இந்நிலையில் அந்த நிறுவனம் தொடர்பான ஒப்பந்தத்தினை முடித்துக்கொண்டார் சச்சின். தன் படம், பெயர் மற்றும் லோகோ என எதையும் பயன்படுத்தக்கூடாது என்றும் மேலும் கடந்த வருடம் அதாவது இரண்டு வருடத்திற்கு சுமார் 2 மில்லியன் டாலர் தர வேண்டும் அந்நிறுவனத்தின் மீது ராயல்டி கேஸ் கொடுத்துள்ளார் சச்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement