சந்திரசேகர் மறைவுக்கு சச்சின் தெரிவித்த இரங்கல் – ட்வீட் இதோ

Sachin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தமிழக வீரரான வி.பி சந்திரசேகர்(வயது 57) நேற்று இரவு தனது மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இவர் இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிட தக்கது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணனையாளர், பயிற்சியாளர் மற்றும் டி.என்.பி.எல் அணி உரிமையாளர் போன்ற பல கிரிக்கெட் தொடர்பான பணிகளை செய்து வந்தார். 1961ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சென்னையில் பிறந்த இவர் தமிழக அணிக்காகவும், இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் மகேந்திர சிங் தோனி முதன்முதலில் சென்னை அணிக்கு பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் சந்திரசேகர் என்பது நினைவுகூரத்தக்கது.

இவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகிகள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் சந்திரசேகருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் சச்சின் குறிப்பிட்டதாவது : வி பி சந்திரசேகர் இறந்துவிட்டார் எந்த என்ற செய்தியை கேட்பதற்கு மிகவும் வருத்தமாக உள்ளது அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

Advertisement