30 வருஷத்துக்கு முன்னாடி வாங்கிய காரை தொலைச்சிட்டு இப்போது தேடும் சச்சின் – எதற்கு தெரியுமா ?

Sachin
- Advertisement -

இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் விளையாடி கிரிக்கெட்டில் எண்ணிலடங்கா சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்குபவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் கடவுளாக இன்றளவுக்கும் இந்தியர்களால் புகழப்படும் லெஜெண்ட் டெண்டுல்கர் பணத்தை மட்டும் அல்லாமல் மக்களிடையே மிகுந்த அன்பையும் பெற்றுள்ளார்.

Sachin 1

- Advertisement -

சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவர் குறித்த செய்திகள் மற்றும் அவர் குறித்த செயல்பாடுகளை நாம் தொடர்ந்து சமூக வலைதளம் மூலமாக தெரிந்து கொண்டுதான் வருகிறோம். அந்த வகையில் ஏற்கனவே சச்சின் அடிக்கடி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருந்து ரசிகர்களுக்கு வித்தியாச வித்தியாசமான வேண்டுகோள்களை வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தான் 1990களில் வாங்கிய “முதல் கார் ஆன மாருதி 800” எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் யாருக்கேனும் அது தெரிந்தால் தனக்கு அதைத்தேடி மீண்டும் தன்னிடம் வர உதவி செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். இது குறித்து சச்சின் தெரிவிக்கையில் :

Sachin 2

நான் முதல் முதலில் வாங்கிய மாருதி 800 கார் என்னிடம் துரதிஷ்டவசமாக தற்போது இல்லை. ஆனால் நான் அந்த காரை இப்பொழுது திரும்பி பெற விரும்புகிறேன். என்னுடைய சம்பளத்தில் வாங்கிய முதல் கார் அதனால் அது எப்போதும் என்னுடன் இருக்க விரும்புகிறேன். எனவே மீண்டும் அதனை எனக்கு திரும்ப பெற்றுத்தர நீங்கள் உதவ வேண்டும் என்று சமூக வலைதளம் மூலமாக இந்திய ரசிகர்களுக்கு சச்சின் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sachin 1

மேலும் ரசிகர்களிடம் சச்சின் வேண்டுகோள் வைத்துள்ளதால் மீண்டும் அந்த கார் தன்னிடம் திரும்பி வரும் என்றும் சச்சின் எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் ஒரு அலாதியான கார் பிரியர் அவரிடம் விலைஉயர்ந்த பல கார்கள் இருப்பினும் தன்னுடைய முதல் காரை அவர் ராசியாக கருதுவதால் அதனை தற்போது தேடித்தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement