- Advertisement -
டி20

என்னை மன்னிச்சுடுங்க…ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பங்களாதேஷ் பந்துவீச்சாளர்.

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது.

இந்த தொடரில் லீக்சுற்றுகள் முடிவடைந்த நிலையில் புள்ளிகளின் அடிப்படையில் இந்தியஅணி முதலில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கடந்த 16ம் தேதி கடைசிலீக்கில் இலங்கையுடன் மோதிய வங்கதேச அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

நேற்று நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக்கின் அபாரமான சிக்ஸரால் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ஒருகட்டத்தில் 2ஓவர்களில் 34ரன்கள் தேவை என்றிருந்த போது 19வது ஓவரை வங்கதேச அணிவீரரான ரூபல் உசேன் வீச அந்த ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக் இரண்டு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் உட்பட 22ரன்களை விளாசினார்.


It’s very bad since the match was finished. Honestly I never thought that the Bangladesh team will come so close to the match. I will apologize to everyone. I forgive me all.

இந்த ஓவர்தான் வங்கதேசத்திடமிருந்த வெற்றியை இந்தியாவிற்கு பறித்துத்தர காரணமாக இருந்தது.இதனால் இந்த தோல்விக்கு காரணமான ரூபல் உசேன் சமூகவலைத்தங்களான டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் வங்கதேச ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார்.

- Advertisement -