என்னுடைய போன் கால் மட்டும் ஏன் எடுக்கமாட்றீங்க ? தோனியிடம் கேள்வி எழுப்பிய ஆர்.சி. சிங் – சாமர்த்தியமான பதிலளித்த தோனி

RP-sing
- Advertisement -

இந்திய அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது எளிமையான பாணியில் ஒரே ஒரு இன்ஸ்டகிரம் வீடியோவை வெளியிட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்திருந்தார்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் தன்னுடைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் கலந்து கொள்ள துபாய் சென்றுள்ளார். தோனி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தொடர்ந்து அவருடன் விளையாடிய ,தற்போது விளையாடிக் கொண்டிருக்கின்றனர் மற்றும் எதிரணி வீரர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் நண்பரும் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றபோது அதிக விக்கெட் வீழ்த்திய வருமான ஆர்பி சிங் தோனி குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில்…

Rp Singh 1

தோனி மிகவும் அமைதியான மனிதர். அவரை நான் அமைதியாக மட்டுமே பார்த்திருக்கிறேன். எப்போதும் எங்களது செல்போன் அழைப்புகளை நீங்கள் ஏற்பது இல்லை, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று தோனியிடம் ஒருமுறை கேட்டேன். அதற்கு என்னிடமும் முனாஃப் படேலிடமும். ‘கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் உடனடியாக உங்களது அழைப்புகளை எடுப்பேன்’’.

RP singh

ஒரு ரிங் அடிப்பதற்குள், இல்லை, இல்லை, ரிங் அடிக்க ஆரம்பிக்கும் போதே உங்களது அழைப்புகளை எடுத்து விடுவேன் என்று கூறியிருந்தார். அவர் சொன்னது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. இப்போது நான் அதனை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று கலகலவென பேட்டி கொடுத்துள்ளார் ஆர்பி சிங்.

Advertisement