கோலிக்கு பதிலாக ரோஹித் கேப்டன். டாஸ் வென்றதும் வெற்றியை உறுதி செய்து அசத்தலான முடிவு – விவரம் இதோ

Rohith-toss
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது டி20 போட்டி இன்று மவுண்ட் மாங்கனியில் தற்போது துவங்கியுள்ளது.

Rohith-1

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் கோலி ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். மேலும் தற்போது டாஸ் போடப்பட்டு முடிந்தது. டாசில் வெற்றிபெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக சாம்சன் துவக்க வீரராக களமிறங்கினார். தற்போது வரை இந்திய அணி 2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 10 ரன்களை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் டாஸ் வென்று ரோஹித் முதலில் பேட்டிங் செய்த முடிவு மிகச்சரியானது என்றே கூறலாம்.

Samson

ஏனெனில் இந்த மைதான கண்ணோட்டம் மற்றும் புள்ளிவிவரங்களை பொறுத்த மட்டில் முதலில் பேட்டிங் செய்த அணியே 90 சதவீததிற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதால் ரோஹித் டாஸின் ஆரம்பத்திலே இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளார். மேலும் இந்திய அணி இந்திய அணி இந்த தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நம்பலாம்.

Advertisement