கோலியை அடுத்து அனுஷ்கா சர்மாவுடன் ஏற்பட்ட பிளவு என்னதான் பிரச்சனை ரோகித் சர்மாவுக்கு – விவரம் இதோ

anushka
- Advertisement -

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியதில் இருந்து தொடர்ந்து இந்திய அணி குறித்தும், கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே பிளவு ஏற்பட்டது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

rohith

- Advertisement -

மேலும் ஒருநாள் அணி கேப்டன், டெஸ்ட் அணி கேப்டன் என இரண்டிற்கும் தனித்தனி கேப்டன் என்ற செய்திகளும் வெளியாகியது. எனவே கோலி டெஸ்ட் அணிக்கும், ரோஹித் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக மாறப் போகிறார்கள் என்றும் கூறப்பட்டது. அதன்பின் கேப்டன் மாற்றத்தால் கோலி மற்றும் ரோஹித் இடையே சுமூகமான சூழ்நிலை இல்லை என்றும் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால் அவை அனைத்தும் உண்மை இல்லை என்று இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் கூறினார். ஆனால் இந்நிலையில் கோலி மற்றும் ரோஹித் இடையே சுமூகமான உறவு இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு நிகழ்வை ரோகித் சர்மாவை வெளிக்காட்டியுள்ளார். அது யாதெனில் இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை சில தினங்களுக்கு முன்பு பின்தொடர்வதை நிறுத்திய ரோகித் சர்மா அதனைத் தொடர்ந்து தற்போது கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மாவையும் இன்ஸ்டாகிராமில் இந்த பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார்.

anushka

இதன் காரணமாக அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிளவு உண்மைதானா என்று எண்ண தோன்றுகிறது. ஆனால் உண்மை இன்னும் முழுதாக நமக்குத் தெரியவில்லை ஏனெனில் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் அவர்களின் தொடரவில்லை என்றால் அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சனை உள்ளதா ? அல்லது இன்ஸ்டாகிராமில் இருந்து பின் தொடர்வதை நிறுத்தியதற்கு வேறு யாதேனும் காரணம் உள்ளதா என்பது போல நிறைய கேள்விகள் இருப்பதால் பொறுத்திருந்து பார்த்தால் உண்மை புரியும்.

Advertisement