இதற்கு முன்பு நான் இதை செய்ததே இல்லை. என் வாழ்வில் இதுவே முதல்முறை – ஆட்டநாயகன் ரோஹித் பேட்டி

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை எடுத்தது.

Rahul

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 65 ரன்களையும், கேப்டன் கோலி 38 ரன்களும் குவித்தனர். இதனால் நியூசிலாந்து அணிக்கு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி நிர்ணயித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்ததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த போட்டியில் வில்லியம்சன் 95 ரன்கள் குவித்து அபாரமாக போராடினார்.

பிறகு சூப்பர் ஓவரை இந்திய அணியின் பும்ரா வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்கள் குவித்தது. பின்னர் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்ததால் கடைசி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ரோஹித் அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம் இந்திய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Rohith

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா கூறியதாவது : சர்வதேச அளவில் நான் சூப்பர் ஓவரில் முதல்முறையாக தற்போதுதான் விளையாடினேன். முதலிலிருந்தே அதிரடியாக விளையாடுவதா அல்லது ஒன்று இரண்டு ரன்களாக அடிக்கலாமா என்று குழப்பம் இருந்தது. ஆனால் இறுதியில் போட்டி நல்ல விதத்தில் முடிந்தது. சூப்பர் ஓவரில் பவுலர்கள் தவறு செய்வதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

Rohith

அதேபோன்று கடைசி இரண்டு பந்தில் பவுலர்கள் செய்த தவறை நான் பயன்படுத்தி 2 சிக்சர்களை அடித்து வெற்றி பெற வைத்தேன் என்றும் ரோகித் சர்மா கூறினார். மேலும் இன்று நான் நன்றாக விளையாடினேன் இன்னும் சில நேரம் விளையாட நினைத்தேன். ஆனால் நான் அவுட்டான விதம் எனக்கு வருத்தமே அளித்தது. இன்றைய போட்டியில் வென்று விட்டால் தொடரை வென்று விடலாம் என்று தெரியும். எனவே இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வெளிப்படுத்தினேன் என்றும் ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement