ஷமி சிறப்பாக பந்துவீச இதுதான் காரணம். கிண்டலாக பதிலளித்த ரோஹித் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IND

- Advertisement -

இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ரோகித் சர்மா தேர்வானார். ரோஹித் முதல் இன்னிங்சில் 176 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 127 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா மற்றும் ஷமி என அனைவரும் கலக்கினார்கள். ஷமி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் ரோகித் சர்மா ஷமி பந்துவீச்சு குறித்து கூறியதாவது : இரண்டாவது இன்னிங்சில் ஷமி சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் வீழ்த்திய அந்த 5 விக்கெட்டுகளும் மிக அற்புதமானவை. மேலும் ஷமி எப்பொழுதும் இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவருடைய வேகமும் துல்லியமும் அசர வைக்கிறது என்று ரோஹித் கூறினார்.

Shami

உடனே பத்திரிக்கையாளர்கள் ரோஹித் சர்மாவிடம் அவருடைய இந்த சிறப்பான பந்து வீச்சிற்கு என்ன காரணம் என்று சுருக்கமாக கூறுங்கள் என்பது போல கேட்டார்கள் உடனே அதற்கு பதிலளித்த ரோஹித் கூறியதாவது : அவர் சிறப்பான பந்து வீச்சாளர் அதனாலே சிறப்பாக பந்து வீசுகிறார் மேலும் அவர் பிரியாணி நிறைய சாப்பிடுகிறார் இதனாலேயே அவரால் சிறப்பாக பந்து வீச முடிகிறது என்று கிண்டலாக கூறி அந்த பேட்டியில் இருந்து விடைபெற்று சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement