முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய நடராஜன் குறித்து தனது கருத்தினை தெரிவித்த ரோஹித் – ரசிகர்கள் வரவேற்பு

Nattu
- Advertisement -

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே தற்போது நடைபெற்று வரும் 4 டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்து உள்ளது. இதில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு முறை வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தது. தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த 15 தேதி முதல் காபா மைதானத்தில் தொடங்கி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே டெஸ்ட் தொடரை கைபற்றும்.

nattu 3

- Advertisement -

இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணியும் தனது முதல் இன்னிஸ்சில் 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் முன்னிலை வகித்து தனது இரண்டாவது இன்னிஸ்சில் 294 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. நான்காவது நாள் முடிவில் இந்திய அணி 1.5 ஓவர்கள் எதிர்கொண்டு 4 ரன்கள் மட்டும் குவித்து விக்கெட் இழக்காமல் விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் தமிழக வீரர் நடராஜன் மூத்த வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பிடித்தார். ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் பங்குபெற்ற நடராஜன் மீண்டு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். நடராஜன் 4வது டெஸ்டின் முதல் இன்னிஸ்சில் 24.2 ஓவர்கள் வீசி 78 ரன்கள் விட்டு கொடுத்துள்ளார். இதன்பின் இரண்டாவது இன்னிஸ்சில் 14 ஓவர்கள் வீசி 41 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

nattu 2

நடராஜனின் இந்த டெஸ்ட் பங்களிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா நடராஜனை பாராட்டி உள்ளார். நடராஜன் குறித்து பேசிய ரோகித் சர்மா ” நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மன்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் இவர் எந்தொரு பதற்றமும் இல்லாமல் சிறப்பாக எதிர்கொண்டுள்ளார்.

நடராஜன் சாதுவான வீரர். அதிகம் பேசுவதுமில்லை. ஆனால் பந்து வீச்சில் தனது முழு திறமையையும் வெளி காட்டி வருகிறார். சிராஜ், சைனி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர். இவர்களை விட நடராஜன் சிறப்பாக செயல்பட்டுள்ளார். நடராஜன் பந்தை எதிர்கொண்ட பேட்ஸ்மன்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement