எங்களின் இந்த மோசமான தோல்விக்கு இதுமட்டுமே காரணம் – புலம்பிய ரோஹித்

- Advertisement -

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடனான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச தீர்மானம் செய்தது.

ban 1

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தவான் 41 ரன்களும், பண்ட் 27 ரன்கள் குவித்தனர். மேலும் இறுதி நேரத்தில் க்ருனால் பாண்டியா மற்றும் சுந்தர் அதிரடியாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. பின்னர் 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியின் சீனியர் வீரரான முஷ்பிகுர் ரஹிம் 43 பந்துகளில் 60 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார். பங்களாதேஷ் அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதல் டி20 போட்டி வெற்றி இதுவாகும். இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது : நாங்கள் எடுத்தது வெற்றிக்கு போதுமான ரன்கள் என்று நினைக்கிறேன்.

ban 2

ஆனால் பீல்டிங்கில் செய்த சில தவறுகளால் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டோம் மேலும் அனைத்து தவறு எங்கள் பக்கமே இருந்தது. ரிவியூக்களை நாங்கள் சரியாக எடுக்கவில்லை அவைகளும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொள்வோம். பங்களாதேஷ் அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்க காரணம் எங்கள் அணி வீரர்கள் சிலர் அனுபவமின்மையை இது காட்டுகிறது. அவர்களை மீண்டும் அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் அடுத்த போட்டியில் பலமாக திரும்பி வருவோம் என்றும் ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement