நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளையும் ஒரு தோல்வி மற்றும் ஒரு போட்டி மழை காரணமாக ரத்து என 13 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ரோகித் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். இந்த தொடரில் மட்டும் ரோஹித் 4 சதங்களை விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரோகித் தனது சிறப்பான அதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது : 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் நான் தேர்வாகாத போது மிகவும் வருத்தம் அடைந்தேன். அப்போது முடிவு செய்தேன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நாம் பெரிய வீரராக மாற வேண்டும் என்று நினைத்தேன், அதற்காக உழைத்தேன் அதுவே இந்த உலக கோப்பை தொடரில் நான் அதிக ரன்களை குவிக்க காரணமாகவும் உந்துதலாகவும் உள்ளது.
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் தேர்வாகாததன் வருத்தத்தை தற்போது 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் வெளிக் காட்டி வருகிறேன் என்று ரோகித் கூறினார்.