3 வருஷம் ஆச்சு இவர் லீவ் எடுத்து. முக்கிய வீரர் இல்லாமல் நாளைய போட்டியை சந்திக்கவுள்ள இந்திய அணி – விவரம் இதோ

Ind-2
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை ஜனவரி 5 அசாம் மாநிலம் கவுகாத்தியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Ind

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி துவக்க வீரரான ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் விரும்பினாலும் ரோகித் தான் ஆடுவதாக நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஆடிய ரோகித் சர்மா தற்போது இந்த ஆண்டின் முதல் தொடரான இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார்.

மேலும் 3 ஆண்டுகளுக்கு பின்னர் சர்வதேச டி20 தொடர் ஒன்றில் ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணிக்கு முதல் முறையாக விளையாடுகிறது. கடைசியாக 2017ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் ஓய்வு எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக தற்போது ஷிகர் தவான் மற்றும் ராகுல் ஆகியோர் களம் இறங்க உள்ளனர்.

Rohith-1

ரோஹித்தின் இடத்தை இவர்கள் எந்த அளவு பூர்த்தி செய்வார்கள் என்பது போட்டியின் முடிவை பொறுத்து தான் தெரியும். ராகுல் கடந்த சில தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார் காயத்தில் இருந்து விடுபட்டு வந்த தவான் எப்படி விளையாடப்போகிறார் என்பது தெரியவில்லை. மேலும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார் இதனால் நாளைய போட்டியில் துவக்க ஜோடி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Advertisement