அகர்வால் அவுட். சர்ச்சையான ரோஹித்தின் சைகை – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது இந்தூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 493 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

Agarwal-2

- Advertisement -

இந்திய அணியின் இந்த ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக இந்திய அணியின் துவக்க வீரர் அகர்வால் திகழ்ந்தார். சிறப்பாக விளையாடிய அகர்வால் 243 ரன்கள் எடுத்து சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் அகர்வால் முச்சதம் அடிக்காமல் அவுட்டாகி வெளியேறிதற்கு காரணம் ரோகித் தான் என்று ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் இது ரசிகர்களின் தவறான கருத்து என்றே தெரிகிறது. ஏனெனில் நேற்றைய போட்டியில் இரட்டை சதம் அடித்ததும் புரோகித் அகர்வாலை நோக்கி வேகவேகமாக சிக்ஸர்களாக அடித்து இன்றே முச்சதத்தை அடிக்கவேண்டும் என்பதுபோல காமெடியாக விளையாட்டுக்கு பெவிலியனிலிருந்து சைகை காண்பித்தார். ஆனால் அதனைப் பார்த்த அகர்வால் தொடர்ந்து சிக்சர்களை அடிக்க ஆசைப்பட்டு அவுட் ஆகி வெளியேறியதாக தவறாக புரிந்து கொண்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அகர்வால் அவுட் ஆக ரோஹித் காரணமில்லை ஏனென்றால் மூன்று நாட்கள் ஆட்டம் மீதி இருக்கின்ற நிலையில் மூன்றாம் நாள் முழுவதுமாக இந்திய அணி ஆடினால் கூட வெற்றியில் பிரச்சினை இருக்காது. எனவே அகர்வால் பொறுமையாக இருந்தால் நிச்சயம் முச்சதம் அடித்து இருப்பார் என்பதும் உண்மை.

Advertisement