வலைப்பயிற்சியின் போது கூட இவர்கள் இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்று கொண்டேதான் இருக்கும் – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohith
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வீட்டில் ஓய்வு நேரத்தில் இருக்கும் வீரர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மூலமாக ரசிகர்களிடையே உரையாடி வருகின்றனர். மேலும் சிலர் இன்ஸ்டாகிராம் வழியாக மற்ற வீரர்களுடன் லைவாக பேசி வருகின்றனர்.

- Advertisement -

இதைப்போலவே இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ரோகித் சர்மாவுடன் கலந்துரையாடி வருகின்றனர். அப்போது ஜாலியாக பல்வேறு விஷயங்களை ரோகித் சர்மா அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அதில் குறிப்பிடத் தக்கவையாக : 2013ம் ஆண்டு ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷமி ஆகியோரும் டெஸ்ட் போட்டிகளில் ஒன்றாக அறிமுகமானதை குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

மேலும் ஷமி குறித்து பகிர்ந்து கொண்ட அவர் : வலை பயிற்சிகளின் போது எப்போதும் பச்சை பசேலென இருக்கும் பிட்ச்கள் மட்டுமே கிடைக்கும். அதை பார்த்தவுடன் ஷமி மிகவும் குஷி ஆகி விடுவார். மதியம் எக்ஸ்ட்ரா பிரியாணி சாப்பிடும் போது எவ்வளவு ஆசை இருக்குமோ அதே போன்று அவர் அன்றைய தினம் முழுவதும் சிறப்பாக பந்துவீசி கொண்டே இருப்பார்.

shami

மேலும் தொடர்ந்து பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : பும்ராவும் பயிற்சியின் போது சிறப்பாக பந்து வீசுவார். ஆனால் அவர் அணியில் மூன்று ஆண்டுகளாகத்தான் இடம் பிடித்து விளையாடி வருகிறார். ஆனால் ஷமியும் நானும் 2013ஆம் ஆண்டிலிருந்து ஒன்றாக விளையாடி வருகிறோம் பும்ராக்கும், ஷமிக்கும் இடையே பெரும் போட்டி இருக்கிறது.

அந்தப் போட்டிகளில் அவர்கள் இருவரது பந்துவீச்சில் யார் அதிகமாக ஹெல்மெட்டை பதம் பார்க்கிறார்கள் என்பதுதான் போட்டியாக அமையும் என்று வேடிக்கையாக ரோகித் சர்மா பகிர்ந்துகொண்டார். ரோகித் சர்மாவின் இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஷமி குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement