நான் டபுள் செஞ்சுரி அடிச்ச அப்போ என் மனைவி அழ இதுவே காரணம் – மனம்திறந்த ரோஹித்

Ritika
- Advertisement -

சமகால கிரிக்கெட்டில் எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்யாத சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். எந்த ஒரு வீரரும் சர்வதேச போட்டிகளில் இவரைப் போன்று மூன்று இரட்டை சதங்கள் விளாசியதில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள், டி20 கிரிக்கெட்டில் 4 சதங்கள் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ரோகித் சர்மா.

Rohith

- Advertisement -

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த போட்டியின்போது மூன்றாவது இரட்டை சதத்தை விளாசினார. இந்த போட்டியை ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பெவிலியன்லிருந்து பார்த்துக்கொண்டிருந்தார். மேலும், அவர் இரட்டை சதம் அடித்தவுடன் அவரது கண்களிலிருந்து கண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

இந்நிலையில் அந்த கணத்தில் ரித்திகா ஏன் அழுதார் என்று ரோஹித் சர்மா தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்… நான் எப்போதெல்லாம் நன்றாக ஆடி புதிதாக ஒரு சாதனை படைக்கிறேனோ அப்போதெல்லாம் என் மனைவி அழுது விடுகிறார். அதிலும் இலங்கைக்கு எதிராக நான் 2017ம் ஆண்டு அடித்த அந்த இரட்டை சதம் எனக்கு மிகவும் ஸ்பெஷலானது.

Rohith

ஏனெனில் அன்று எங்களது திருமண நாள். அந்த தினத்தில் இரட்டை சதத்தை அடித்து என் மனைவிக்கு பரிசளித்தேன். மேலும் 197 ரன் இருக்கும்போது ஓடிச்சென்று டைவ் அடித்து விட்டேன் இதன் காரணமாக எனக்கு அடிபட்டு இருக்குமோ என்று ரித்திகா கண்கலங்கி விட்டார். அதன் பின்னர் இரட்டை சதம் அடித்த பின்னர் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா.

Ritika 1

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தில் முன்னாள் வீரர்கள் மற்றுமின்றி தற்போதைய வீரர்களும் தங்களது கிரிக்கெட் அனுபவங்களை சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் ரோஹித் சர்மாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement