இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த தொடரில் அசத்தி வரும் ஒரே பேட்ஸ்மேன் இவர்தான் – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் இந்திய பவுலர்களின் அசத்தலான பந்து வீச்சினால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு சுருண்டது.

Rohith 1

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டநேர முடிவில் ரோகித் சர்மா 8 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் தற்போது இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 300 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.

இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ரன் குவிக்க திணறி வரும் நிலையில் ரோகித் சர்மா மட்டும் ஒருபுறம் இந்திய அணிக்காக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங்கில் அனைவரும் கஷ்டப்பட்டு வரும்பொழுது ரோஹித் மட்டும் 2வது டெஸ்ட் போட்டியின் போது அபாரமாக விளையாடி ஒரு சதம் அடித்தார். அதுமட்டுமின்றி பகலிரவு டெஸ்ட் போட்டியில் அரைசதம் என இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

rohith 1

இந்த தொடரில் இந்திய அணி வீரர்களில் இதுவரை யாரும் 200 ரன்களைக் கூட பூர்த்தி செய்யாத நிலையில் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருக்கும் வேளையில் இந்த தொடரில் மட்டும் 300 ரன்களை கடந்துள்ளார். மேலும் இன்றைய நாளில் விக்கெட் விழக்கூடாது என்று மெதுவாக விளையாடிய ரோகித் நாளை நிச்சயம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohith

இதனால் நாளைய போட்டியில் அவர் சதம் அடிக்க பெரிய வாய்ப்பு உள்ளதாக நாம் நம்பலாம். இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement