தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய ரோஹித்

Samaira
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மா கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். தனது சிறப்பான ஆட்டத்தினை இந்திய அணிக்காக தொடர்ந்து வழங்கி வரும் ரோகித் சர்மா தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது மேனேஜர் ஆன ரித்திகா என்பவரை காதல் செய்து திருமணம் புரிந்து கொண்டார். அதன் பின்னர் இந்த ஜோடிக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் இதேநாளில் டிசம்பர் 30 ஆம் தேதி ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அவரது குழந்தைக்கு சமைரா என்று என்ற பெயரை வைத்து ரோஹித் பதிவிட்ட புகைப்படம் ஏற்கனவே இணையத்தில் வைரல் ஆனது.

- Advertisement -

தோனியின் பெண் குழந்தை எவ்வளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ அதை போன்று தற்போது ரோஹித்தின் செல்ல மகளும் பிரபலமாகி வருகிறார். அவரது முதல் பிறந்தநாளான இன்று ரோகித் சர்மா தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவரது வீட்டில் கொண்டாடினார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ரோஹித் பதிவிட்டுள்ளார். பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.

Advertisement