அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனர் இவர்தான் – தேர்வுக்குழு தலைவர் பேட்டி

ind
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரரான ராகுல் தொடர்ந்து சொதப்பி வருவதால் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடக்க இருக்கும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அவர் இடம் பிடிக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

rahul

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த ராகுல் அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அவர் ஆட்டம் படுமோசமாக அமைந்தது. அவருக்கு பதில் ரோகித் சர்மாவை துவக்க வீரராக டெஸ்ட் போட்டியில் களமிறக்கலாம் என்றுகிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வு குழு சார்பாக இந்திய அணியின் துவக்க வீரர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரராக ரோகித் சர்மா இடம் பெறுவது உறுதியாகி உள்ளது. அதன்படி மயங்க் அகர்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் துவக்க வீரராக களம் இறங்குவார்கள்.

rohith

மேலும் கோலி, விஹாரி மற்றும் ரஹானே ஆகியோர் தொடர்ந்து அடுத்து அடுத்து களம் இறங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் தொடர்ச்சியான சொதப்பல் ஆட்டத்தின் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் ரோஹித் மீதுள்ள நம்பிக்கை காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் தேர்வுக்குழு நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement