சாதனை சதம் விளாசிய ரோஹித் சர்மா. இந்த சென்ஞ்சுரில – அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கி ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட 99 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

Rohith

- Advertisement -

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற தற்போது புஜாராவுடன் இணைந்து ரோஹித் விளையாடி வருகிறார்.

இரண்டாவது இன்னிங்சில் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த போட்டியில் சரியாக 204 ஆவது பந்தினை சந்தித்த போது 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டாவது சதத்தை பதிவு செய்தார்.

rohith 2

இதில் ஸ்பெஷல் யாதெனில் இந்திய மண்ணை தாண்டி அயல்நாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதுமட்டுமின்றி இன்று முதல் சதத்தை அவர் சிக்சருடன் கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 3 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement