எது முடியாதுனு குறை சொன்னாங்களோ அதை செய்து காட்டிய ரோஹித் – வெறித்தனமான சதம்

Rohith-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி துவங்கி ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணியானது 290 ரன்களைக் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியை விட 99 ரன்கள் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது.

Rohith

பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணியானது தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ரோஹித் மற்றும் புஜாரா ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 153 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்சில் ரோகித் சர்மா இங்கிலாந்து பவுலர்களுக்கு எதிராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 256 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 127 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது எட்டாவது சதத்தை பதிவு செய்தார்.

rohith 2

இதில் ஸ்பெஷல் யாதெனில் இந்திய மண்ணை தாண்டி அயல்நாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அதுமட்டுமின்றி இன்று முதல் சதத்தை அவர் சிக்சருடன் கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் 3 ஆயிரம் ரன்களை கடந்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Rohith

மேலும் ரோகித் ஒரு அதிரடி ஆட்டக்காரர் என்பதனால் அவரால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாட முடியும் என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான ஆட்டம் வெளிப்படாது என்றும் சிலர் விமர்சித்தனர். ரோஹித் சிக்ஸர்களை மட்டுமே அடிக்கக் கூடியவர் அவரால் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சிறப்பாக செயல்பட முடியாது என்று விமர்சித்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சிறப்பான பார்மில் இருக்கும் ரோகித் வெளிநாட்டு மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement