எனக்கு இதனை செய்ய முடியவில்லையே என்ற கவலை மட்டுமே மனதில் பெரிதாக உள்ளது – ரோஹித் சர்மா

Rohith-1
- Advertisement -

நடப்பு உலக கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் முடிந்த நிலையில் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போன்ற நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

ferguson

- Advertisement -

இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது. அடுத்து நேற்று நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியதால் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடர் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ரோகித் சர்மா. அதில் அவர் கூறியதாவது : நாங்கள் முக்கியமான நேரத்தில் சாதிக்க தவறிவிட்டோம். அரையிறுதிப் போட்டியில் முதல் 30 நிமிடங்கள் ஆட்டத்தை புரட்டிப்போட்டுவிட்டது. என்னுடைய இதயம் இப்போது கனமாக உள்ளது. உங்களுக்கும் அப்படி தான் இருக்கும் என்று எனக்கு புரிகிறது.

Dhoni

கடைசி உலகக் கோப்பை தொடரான இந்த உலக கோப்பை தொடரில் தோனிக்காக கோப்பையை கைப்பற்ற நினைத்தோம். ஆனால் அது முடியாமல் போனது என் மனதை மிகவும் பாதித்துள்ளது. இந்திய ரசிகர்கள் அனைவரும் எங்களுக்கு இங்கிலாந்தில் நாங்கள் எங்கு சென்றாலும் விளையாடினாலும் நீல நிறமுடைய உடையோடு மைதானத்தை நிரப்பி எங்களுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என்று உருக்கமுடன் ரோஹித் பேட்டியளித்தார்.

Advertisement