நான் பார்த்து ரசிக்கும் 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

கொரோனோ வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளதால் உலகிலுள்ள பல முன்னணி வீரர்களும் தங்களுக்கு பிடித்த விடயங்களை சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு பிடித்த பவுலர், பேட்ஸ்மேன், முக்கிய போட்டி என மறக்க முடியாத நிகழ்வுகள் அனைத்தையும் வெளிப்படுத்தி வரும் வீரர்கள் ரசிகர்களின் கேள்விக்கு எந்தவித தயக்கமுமின்றி நேரடியாக பதில் அளித்து வருகின்றனர்.

Rohith

- Advertisement -

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த அவர் இந்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடர் அல்லது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இரண்டில் எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரோஹித் இரண்டுமே முக்கியமான தொடர் எனவே இரண்டிலும் விளையாட ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். மேலும் தற்போதைய காலகட்டத்தில் எந்த பேட்ஸ்மேன்களை ஆட்டத்தை நீங்கள் அதிகமாக ரசித்துப் பார்க்கிறார்கள் என்று கேட்டதற்கு இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜேசன் ராய் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோரது பேட்டிங்கை பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Smith

மேலும் ஊரடங்கு முடிந்ததும் அடுத்த கட்ட திட்டம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட துவங்குவதுதான் என்று பதிலளித்திருந்தார். மேலும் தோனி குறித்து ஒரு வார்த்தை என்ற கேள்விக்கு ஜாம்பவான் என்று பதிலளித்த ரோஹித் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்தும் ஒரு வார்த்தை என்ற கேள்விக்கு சிரித்தபடி காணப்பட்ட ஒரு எமோஜியை பதிவிட்டு இதற்கான அர்த்தத்தை கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம், டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் இதில் உங்களது விருப்பம் என்ன என்று கேட்டதற்கு இரண்டுமே நடந்தால் சந்தோஷம் தானே வேற என்ன என்று ரோஹித் பதிலளித்தார். ரோஹித்தின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement