நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மாவிற்கு ஏன் ஓய்வு அளித்தார்கள் தெரியுமா ? – விவரம் இதோ

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டி வெலிங்டன் நகரில் நேற்று நடைபெற்றது.

Thakur 1

- Advertisement -

இந்த போட்டியிலும் இரு அணிகளும் 165 ரன்களை குவிக்க போட்டி கடந்த 3 ஆவது போட்டியை போல சூப்பர் ஓவர் வரை சென்றது. இந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 13 ரன்கள் குவிக்க 14 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல 4-0 என்ற கணக்கில் இந்த தொடரில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா, ஜடேஜா மற்றும் ஷமி ஆகி அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலாக சுந்தர், சைனி மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாட வைக்கப்பட்டனர். ஏற்கனவே மூன்றாவது டி20 போட்டி முடிந்தவுடன் சைனி மற்றும் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கோலி தெரிவித்திருந்தார் இந்நிலையில் கடந்த பல தொடர்களாகவே அணியில் இடம் பெற்றும் வாய்ப்பு கிடைக்காமல் அமர்ந்திருக்கும் சாம்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகம் இருந்தது.

Kohli-1

எனவே தொடரை வென்று விட்ட காரணத்தினாலும், தொடர்ச்சியாக போட்டிகளில் ஆடி வரும் ரோகித் சர்மாவுக்கு நேற்றைய போட்டியில் கோலி ஓய்வு கொடுக்க முடிவெடுத்ததன் முதல் காரணம் சஞ்சு சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்பதால்தான். ஏனெனில் இலங்கை அணிக்கெதிராக ஒரே வாய்ப்பினைப் பெற்ற சம்சன் அதிர்ஷ்டம் இன்றி ஆட்டமிழந்து வெளியேறினார்.

Samson

எனவே மீண்டும் அவருக்கு சில வாய்ப்புகளை வரவேண்டும் என்ற காரணத்தினாலேயே அவருக்கு நேற்று கோலி வாய்ப்பை வழங்கினார். ஆனால் நேற்றும் சாம்சன் அதிர்ஷ்டம் இன்றி ஒரு சிக்சர் அடித்து அதே ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்களை வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement