மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது அழகிய பெண் குழந்தை பிறந்தது. பிறந்து சில மாதங்களே ஆன தனது குழந்தையை பார்க்க நேரம் இல்லாமல் இருந்த ரோஹித் தற்போது தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது ரோஹித் அவருடைய குழந்தையை பார்த்து பாட்டு ஒன்றினை பாடுகிறார். இதோ அந்த வீடியோ :
We all have a little bit of gully in us ???? pic.twitter.com/8wATT7YF4l
— Rohit Sharma (@ImRo45) March 23, 2019
இந்த விடீயோவினை ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரோஹித் தனது தோழியை நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.