இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான் – ரோஹித் சர்மா தேர்வு செய்த அந்த 5 பேர்

- Advertisement -

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எந்தவித கிரிக்கெட் போட்டிகளும் இல்லை என்பதனால் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஐ.பி.எல் தொடரும் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போது சமூக வலைதளம் மூலம் இந்திய வீரர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.

Rohith

- Advertisement -

இந்த ஓய்வு நேரத்தில் வீரர்கள் பலரும் ரசிகர்களுடன் உரையாடுவது அவர்களின் கேள்விக்கு பதிலளிப்பது, மேலும் சக வீரர்களுடன் லைவில் சேட் செய்வது என ஆக்டிவாக இருந்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும், துணை கேப்டன் ரோகித் சர்மா இந்தியாவின் ஆல்டைம் பெஸ்ட் ஐந்து பேட்ஸ்மேன்களை தேர்வு செய்துள்ளார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்டாக விளையாடி 3 இரட்டை சதங்களை விளாசி சாதனை மைல்கல்லை உச்சத்தில் வைத்து இருக்கும் ரோகித் சர்மா பேட்டிங்கில் எவ்வாறு அதிரடி காண்பித்து வருகிறாரோ அதே போன்று இந்த பெஸ்ட் 5 பேட்ஸ்மேன்கள் தேர்விலும் தற்போது அதிரடி காட்டி உள்ளார்.

Laxman

அதன்படி இந்தியாவின் ஆல் டைம் 5 பெஸ்ட் பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சட்டென்று : சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் மற்றும் சேவாக் என ஒரே காலகட்டத்தில் விளையாடிய 5 வீரர்களின் பெயரை தெரிவித்தார். மேலும் அதற்கான காரணத்தையும் ரோகித் கூறுகையில் : நான் சிறு வயதிலிருந்தே தெண்டுல்கரின் பேட்டிங்கை பார்த்து வளர்ந்தவன் என்பதால் அவரை குறிப்பிட்டுள்ளேன்.

dravid 2

அதன் பின்னர் டிராவிட் இங்கிலாந்து தொடர்களில் சிறப்பாக ஆடி சதங்களை அடித்து அசத்தினார் அதனால் அவரையும் அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்யும்போது துவக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடும் சேவாக்யையும் அதன் பின்னர் எதிரணியின் நம்பிக்கை சிதைத்துவிடும் கங்குலி மற்றும் லட்சுமணனின் ஆகிய 5 பேரையும் தேர்வு செய்ததாக ரோகித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement