ரோஹித் மற்றும் தவான் ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் ஆடமுடியுமாம். நல்லா போன நேரத்துல ஒரு ட்விஸ்ட் – விவரம் இதோ

Dhawan-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

Ind vs Aus

- Advertisement -

இந்தத் தொடரின் முடிவை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மதியம் ஒன்று 1.30 மணிக்கு துவங்கவுள்ளது. இரு அணிகளுக்கும் சம பலம் வாய்ந்த அணி என்பதால் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு காயம் ஒரு மிகப்பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.

ஏனெனில் அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் அனைவரும் காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் நடந்து முடிந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் தவான் மற்றும் ரோஹித் ஆகியோர் அடைந்த காயம் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் தவான் மற்றும் ரோஹித் ஆகியோரில் ஒருவர் மட்டுமே விடுவார்கள் என்ற அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

Rohith

அதன்படி தோள்பட்டையில் காயம் அடைந்த ரோகித் சர்மாவின் காயம் சிறிய அளவிலேயே இருந்ததால் அவர் இன்றைய போட்டியில் நிச்சயம் பங்கேற்பார் என்று தெரியவந்து உள்ளது. ஆனால் விலா எலும்பு பகுதியில் அடிவாங்கிய தவான் காயம் சற்று கவலை அளிக்கும் விதத்தில் இருப்பதால் அவர் என்று போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

dhawan 3

அதன் காரணமாக இன்றைய போட்டியில் ரோகித் தொடக்க வீரராக களமிறங்கி அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் தவான் விளையாடவில்லை என்றால் அவருக்கு பதிலாக மிடில் ஆர்டரில் மணிஷ் பாண்டே மற்றும் ஜாதவ் அல்லது துபே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement